Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

நள்ளிரவில் வாள் வெட்டுக்குழு அட்டகாசம் - ஒருவரின் கை துண்டிப்பு - வீடு தீக்கிரை


யாழ்ப்பாணம் கோண்டாவிலில் உள்ள இலங்கை போக்குவரத்து சபை சாலை (டிப்போ) அமைந்துள்ள பகுதிக்கு அண்மையில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் நான்கிற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அதேவேளை , வீடொன்றுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளதுடன் , கார் , முச்சக்கர வண்டி என்பவருக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது , 

மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேருக்கும் அதிகமானவர்களைக்  கொண்ட வன்முறைக் கும்பல் வாகனங்கள் உள்பட பெறுமதியான பொருள்கள் சேதப்படுத்தி , வீடொன்றினுள் புகுந்து சரமாரியாக வாள் வெட்டினை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவத்தில் ஒருவரின் கை துண்டாடப்பட்டதுடன்  நான்கிற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்த நிலையில்  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 









No comments