Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

ராமநாதபுரத்தில் ட்ரோன்கள் பறப்பதற்கு தடை!




ராமநாதபுரத்தில் ட்ரோன்கள் உள்ளிட்ட ஆளில்லா விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐ.என்.எஸ் பருந்து கடற்படை தளத்தில் இருந்து மூன்று கி.மீ சுற்றுவட்டார பகுதிகளில் ட்ரோன்கள் உள்ளிட்ட ஆளில்லா விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கடலோர காவல்படையினர் வெளியிட்டுள்ள செய்தியில், ‘ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளியில் உள்ள ஐ.என்.எஸ் பருந்து கடற்படை தளத்தில் இருந்து 3 கி.மீ சுற்றுவட்டாரப் பகுதிகளில் ட்ரோன்கள் உள்ளிட்ட அனைத்து வித ஆள் இல்லா விமானங்களை எந்தவித முன் அறிவிப்பும் இன்றி இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடையை மீறி எந்தவித ஆள் இல்லா விமானங்கள் இயக்கினாலோ அல்லது பறந்தாலோ எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தகற்கப்படும். அல்லது பறிமுதல் செய்யப்படும்.

மேலும் அதனை இயக்கியவர்கள் மீதும் இந்திய தண்டனை சட்டத்தின்படி சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments