Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

வல்வெட்டித்துறையில் தனிமையில் இருந்த பெண் வன்புணர்வு - சந்தேகநபர் கைது!



தனிமையில் வாழ்ந்த பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியமை, சட்டத்துக்குப் புறம்பான வன்புணர்வு மற்றும் படுகாயம் ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் 30 வயதுடைய ஒருவர் வல்வெட்டித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அத்துமீறி வீடு புகுந்த 30 வயதுடைய நபர், வீட்டில் தனிமையில் வாழ்ந்த 35 வயதுடைய பெண்ணை வன்புணர்ந்துள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

No comments