குடும்ப தகராறு காரணமாக பெற்றோர் , சகோதரி மற்றும் மச்சானின் தாக்குதலுக்கு இலக்கான இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்.
மஹியங்கனை மினிப்போ பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சுனில் நிஷங்க (வயது 28) என்பவரே உயிரிழந்துள்ளார். www.tamilnews1.com
கடந்த 06ஆம் திகதி குறித்த நபருடன் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து , அவரின் தாய் , தந்தை , சகோதரி மற்றும் சகோதரியின் கணவன் ஆகியோர் தடிகளால் அவரை தாக்கியுள்ளனர். www.tamilnews1.com
அதில் படுகாயமடைந்த நபர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , சிகிச்சை பலனின்றி கடந்த 08ஆம் திகதி இரவு உயிரிழந்துள்ளார்.
அதனை தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டவர்களை கைது செய்து மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர். www.tamilnews1.com
அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த நீதவான் கைது செய்யப்பட்ட நபர்களை எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். www.tamilnews1.com
No comments