பொம்மைக்குள் மறைத்து பொதிகள் சேவைகள் (பார்சல் சேர்விஸ்) ஊடாக போதை பொருளை கடத்தி விற்பனை செய்து வந்த பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
"குடு நோனி" என அழைக்கப்படும் 39 வயதான குறித்த பெண்,
பொம்மைகளுக்குள் போதை பொருட்களை மறைத்து வைத்து அதனை நாடளாவிய ரீதியில் பொதிகள் சேவைகள் ஊடாக கடத்தி விற்பனை செய்து வந்துள்ளார்.
குறித்த பெண் தொடர்பிலான தகவல்கள் கிடைத்ததை அடுத்து, குறித்த பெண்ணினை பொலிஸார் கண்காணிப்பு வலயத்தினுள் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் கொண்டு வந்து வந்திருந்தனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் அனுராதபுரம் பகுதிக்கு குறித்த பெண் , பொம்மைக்களுள் போதை பொருளை மறைத்து வைத்து , பொதிகள் சேவைகள் ஊடாக அனுப்ப முயன்ற போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments