பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மோரா தோட்ட மேற்பிரிவில் உள்ள வீடு ஒன்றில் நான்கு பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அப்பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் காஞ்சனா (வயது 36) என்பவரே இன்று (12) காலை சடலமாக மீட்கப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் மீட்கப்பட்ட குறித்த வீட்டினை சோதனை செய்த போது, அவ்வீட்டில் கூடை ஒன்றில் இரத்த கரைபடிந்த ஆடைகள் இருந்ததையும், அதனுடன் இணைந்ததாக சுமார் 7 மாதங்கள் மதிக்கதக்கதான பெண் சிசு ஒன்றின் சடலம் இருந்துள்ளதையும் பொலிஸார் கண்டுள்ளனர்.
சட்டவிரோதமாக இடம்பெற்ற கருக்கலைப்பின் போது இவ்விரு உயிரிழப்புக்களும் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார், கருக்கலைப்பு சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பெயரில் 35 வயதுடைய பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments