15 வயது சிறுமி ஒருவரை பாலியல் நடவடிக்கைகளுக்கான இணையத்தின் ஊடாக விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வங்கி ஒன்றின் முன்னாள் முகாமையாளர் ஒருவர் மற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் குறித்த சம்பவத்துடன் தொடர்பு பட்டுள்ளார் எனவும் , அவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
No comments