Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

125 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றுக் கொண்ட சம்பவம் தொடர்பில் மீண்டும் வழக்கு தாக்கல்


2015 ஆம் ஆண்டு 125 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றுக் கொண்ட சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் சுங்க அதிகாரிகள் நால்வருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மீண்டும் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

பஞ்சிகாத்தை பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் இறக்குமதி செய்த 1,500 மில்லியன் ரூபா பெறுமதியான வாகன உதிரிப்பாகங்களை சலுகை அடிப்படையில் விடுவிக்க 125 மில்லியன் ரூபா இலஞ்சம் வாங்கியமை தொடர்பில் குறித்த அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலஞ்சம் ஊழல் ஆணையாளர்களின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை என்று பிரதிவாதி முன்வைத்த ஆட்சேபனை காரணமாக மீள வழக்கு தாக்கல் செய்தல் அடிப்படையில் குறித்த வழக்கு இதற்கு முன்னர் இரத்து செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் பூர்த்தி செய்ததன் பின்னர் அவர்களுக்கு எதிராக மீண்டும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
 

No comments