பளை முல்லையடி பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முல்லையடி பகுதியில் இன்று அதிகாலை கனரக வாகனமொன்று வீதியோரமாக நிறுத்தி வைக்க்பட்டுள்ளது. அதன் மீது வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி, வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை அவதானிக்காது வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகியது.
குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவரில் பொல்காவலை பகுதியினை சேர்ந்த 20 வயதுடைய கோசல என்பவர் உயயிரிழந்துள்ளார். அதில் பயணித்த மேலும் இருவர் காயமடைந்து பளை வைத்தயசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்க்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments