Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

வல்வெட்டித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு கொரோனா




பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக நபர்கள் இருவருக்கு சுகயீனம் காரணமாக உடனடியாக மந்திகை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் அவர்கள் இருவருக்கும் கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

வல்வெட்டித்துறை பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மோதலில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் நேற்று 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் 6 பேரும் இன்று பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட அழைத்துச் செல்லப்பட்டனர்.

அவர்களில் இரண்டு பேர் நீதிமன்ற வளாகத்தில் திடீர் சுகயீனம் எனத் தெரிவித்தனர். அவர்கள் இருவரும் உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டனர். இருவரும் உடுப்பிட்டியைச் சேர்ந்தவர்கள் என்று வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

No comments