ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், பலர் அங்கிருந்து வெளியேறுவதற்காக விமான நிலையங்களில் குவிந்து வருகின்றனர்.
காணொளி நன்றி :- புதிய தலைமுறை
நகரப் பேருந்துகளில் ஏறுவதற்கு முண்டியடிப்பது போல், பலர் விமானத்தில் ஏற முயற்சித்து வரும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.
இதனால் விமான நிலையத்தில் 5 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் கூட்ட நெரிசலால் இறந்தார்களா? அல்லது துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டார்களா என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை.
இதேபோல, விமானத்தில் இடம் கிடைக்காத சிலர், விமானத்தின் சக்கரத்தில் தொங்கியபடி பயணித்துள்ளனர். விமானம் உயரே பறந்த நிலையில், பிடிமானத்தை இழந்த மூவர் வானிலிருந்து கீழே குடியிருப்பு பகுதிகளில் விழும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாக பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
No comments