செஞ்சோலை படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் படுகொலையானவர்களுக்கு யாழ்ப்பாண மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் இன்று(14) அஞ்சலி செலுத்தினார்.
இன்றைய அஞ்சலி நிகழ்வில் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப.மயூரன், யாழ் மாநகர சபை உறுப்பினர்களான வரதராஜன் பார்த்தீபன், சிவகாந்தன் தனுஜன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments