Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

'கண் முன்னே இறக்கின்றார்கள்' களுபோவில வைத்தியசாலையில் கடும் நெருக்கடி!


களுபோவில வைத்தியசாலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளால் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து ஊடகவியலாளர் திலக்ஷனி மதுவந்தி (Thilakshani Maduwanthi) தனது முகப்பு புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.

தனது தாயார் கொரோனா தொற்றுடன் வைத்தியசாலையில் சேர்க்க நீண்ட வரிசையில் இருந்ததாகவும், வரிசையில் காத்திருந்த போது இருவர் கண்முன்னே இறந்துவிட்டதாகவும், சிலர் மயங்கி கீழே விழுந்ததாகவும் அவர் கூறினார்.

இந்தியாவைப் பற்றி நான் சொன்ன செய்திகளை இப்போது என் கண்களால் பார்க்கிறேன்.இன்று அதிகாலை 1:20 am. இது களுபோவில வைத்தியசாலையின் கொவிட் வார்ட், வார்டில் ஒரு படுக்கையில் இரண்டு அல்லது மூன்று நோயாளிகள்.

அவர்கள் தீவிர நோய்வாய்ப்பட்டவர்கள்.வார்டில் உள்ள படுக்கைகளின் கீழ், மற்றவர்கள் உயிருக்கு போராடி, ஒக்ஸிஜனைப் பெறுகிறார்கள். தரையில் நோயாளிகள் நடக்க பயப்படுகிறார்கள்.

மீதமுள்ள அனைத்து (நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள்) நீண்ட இருக்கைகளிலும் bench, நாற்காலிகள், மரங்களின் கீழ் படுத்திருக்கிறார்கள்.மணல் தரையில் ஒரு போர்வையுடனும் அதுவும் இல்லாமல் படுத்துள்ளதை காணமுடிகின்றது.

குளிரிலும் நுளம்பு கடியிலும் , இந்த மக்கள் அனைவரும் கொரோனாவை எதிர்த்துப் போராடுகிறார்கள்.வைத்தியசாலையில் ஊழியர்கள் குறைவாகவே உள்ளனர். அவர்கள் ஒரு தெய்வத்தைப் போல கடினமாக நோயாளர்களுடன் போராடுகின்றனர்.

என் அம்மா இதுபோன்று கொரோனாவுடன் போராடிக் கொண்டிருந்தபோது, ​​என் தந்தை ஒரு ஒக்ஸிஜன் இயந்திரத்திற்கு காத்திருந்தார். இந்த வாழ்க்கையில் பெரிய சந்தோசம் இல்லை. மேலும் உதவியற்ற நிலை.

நாளை எனக்கும் தொற்று ஏற்படும். நான் சொல்ல வேண்டியது ஒன்றே ஒன்றுதான். கொரோனாவை குறைத்து மதிப்பிடாதீர்கள். உங்களால் முடிந்தவரை கவனமாக இருங்கள். குடும்பத்தில் உள்ள அனைவரையும் கவனித்துக் கொள்ளுங்கள்.

இந்தியாவைப் பற்றி நான் சொன்ன செய்திகளை இன்று நான் என் கண்களால் பார்க்கிறேன். கவனமாக இருங்கள் .. மிகவும் கவனமாக இருங்கள்...

திலக்ஷாணி மதுவந்தி

No comments