குருநாகல், கல்கமுவ பிரதேசத்தில் பெண்ணையும் , பெண்ணின் பிள்ளையையும் கொலை செய்து விட்டு ஆணொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கல்கமுவ மஹானான்னேரிய பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து இன்றைய தினம் காலை குறித்த மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது.
பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையில் தகாத உறவு நீடித்து வந்த நிலையில் நேற்றைய தினம் இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதை அடுத்து , பெண்ணை ஆண் கொலை செய்ததாகவும் , அதனை தொடர்ந்து பெண்ணின் பிள்ளையையும் கொன்று விட்டு , தானும் அந்த வீட்டிலையே தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
No comments