அம்பாறையில் வெடி குண்டு தயாரித்த தம்பதியினர் குண்டு வெடிப்பில் படுகாயமடைந்துள்ளனர்.
அம்பாறை - அளிக்கம்பை பிரதேசத்திலுள்ள வீட்டில் நேற்று (17) பிற்பகல் 4.30க்கு இடம்பெற்ற இச்சம்பவத்தில் கணவன் மற்றும் மனைவி ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
அளிக்கம்பை பிரதேசத்தைச் சேர்ந்த குலன் (வயது 65) மற்றும் அவரது மனைவியான வெங்கட்மேரி (வயது 62) ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த கிராமத்தினுள் இரவு வேளைகளில், யானைகள் மற்றும் காட்டு விலங்குகள் ஊடுருவி, பயிர்ச் செய்கைகளை நாசப்படுத்தி வருவது வழமை.
இந்நிலையில், பன்றிக்கு வெடி வைப்பதற்காக, யானை வெடிகளைப் பிரித்து, அதிலுள்ள மருந்துகளை சேர்த்து வீட்டிலேயே குண்டு தயாரித்துக் கொண்டிருந்த போது, அது தவறுதலாக வெடித்துள்ளது. என ஆரம்ப கட்ட விசாரணைகள் ஊடாக அறிய முடிகிறது.
No comments