Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வரணியில் 17 பேருக்கு கொரோனா!


யாழ்.சாவகச்சோி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நடத்தப்பட்ட எழுமாற்று அன்டிஜன் பரிசோதனையில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட  வரணியில் சமுர்த்தி வங்கி ஊழியர் ஒருவர், பனை அபிவிருத்திச் சபை ஊழியர்கள் உட்பட்ட 17 பேருக்கு வரணிப் பகுதியில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் சாவகச்சேரிப் பகுதியில் எண்மருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் தென்மராட்சி கிழக்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்க சிற்றுண்டிச்சாலையின் ஊழியரும் ஒருவர். குறித்த சிற்றுண்டிச்சாலைக்கு நகரின் பெருமளவான வர்த்தகர்களும் மக்களும் செல்பவர்கள் என்பதனால் , அங்கு சென்றுவருபவர்களை அவதானமாக செயற்படுமாறு சுகாதாரத் தரப்பினர் அறிவுறுத்தியிருக்கின்றனர்.

அத்துடன் சிற்றுண்டிச்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 

No comments