Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழில்.5 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களுடன் மூவர் கைது!


யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வரப்பட்ட 5 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் மூவர், பொலிகண்டி பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

2 கிலோ 200 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 120 கிலோ கிராம் கஞ்சாவை , யாழ்ப்பாணத்திற்கு கடல் வழியாக கடத்தி வந்து , அங்கிருந்து வேறு பிரதேசத்திற்கு கொண்டு செல்ல முற்பட்ட போதே மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

உயிர்க்கொல்லி போதைப்பொருளான ஐஸின் (பளிங்கு மெதம்பேட்டமின்) பெறுமதி 2 கோடியே 50 லட்சம் ரூபாய் எனவும் கஞ்சா போதைப்பொருளின் பெறுமதி 2 கோடியே 50 லட்சம் ரூபாய் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.  

  கடற்படையினரின் வழமையான சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கையின் போது இன்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில்  பொலிகண்டி கடற்கரை வீதியில் வைத்து போதைப்பொருட்களை வாகனம் ஒன்றில் ஏற்ற முற்பட்ட போதே அவற்றை கைப்பற்றினர். அவற்றை கடத்த முற்பட்ட மூவரையும் கைது செய்தனர். 

  சந்தேக நபர்கள் 38, 34, 28 வயதுடைய மாங்குளம், இரணைமடு மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் என்று கடற்படையினர் கூறினர்.
  

No comments