கிரிபத்கொட பகுதியில் இளம் தம்பதியினர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
36 வயதுடைய தனஞ்செய அனுருத்த என்ற ஆங்கில ஆசிரியரும் அவரது 27 வயதுடைய மனைவியும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
தனஞ்செய கடந்த 22 ஆம் திகதி கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதுடன், அவரது மனைவி நேற்று (25) காலை உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில், அவர்களின் ஐந்து வயது மகள் பெற்றோரை இழந்து நிர்கதிக்குள்ளாகியுள்ளார்.
No comments