Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

பருத்தித்துறையில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது!


பருத்தித்துறை சுப்பர் மட பகுதியில் சடலமாக மீட்கப்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். 

நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கரவெட்டி இராஜ கிராமம் பகுதியை சேர்ந்த வைரவ நாகரத்தினம் (வயது 78) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 
 
பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சுப்பர் மட பகுதியில் சடலம் ஒன்று காணப்படுவதாக பருத்தித்துறை பொலிஸாருக்கு காலை கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டது. 
 
குறித்த சடலத்தை அடையாளம் காணும் முயற்சியில் விசாரணைகளை முன்னெடுத்த போது , குறித்த நபர் நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராஜ கிராமம் பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. 
 
அதேவேளை பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சடலத்தை ஒப்படைக்க நடவடிக்கை எடுத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 
 
இதேவேளை குறித்த நபர் நேற்றைய தினம் இரவு அவ்விடத்திலிருந்து சத்தமாக பாடல்களை பாடிக்கொண்டு இருந்ததாகவும், காலையில் சடலமாக காணப்பட்டதாகவும் அயலவர்கள் தெரிவித்தனர். 

No comments