தாட்டில் சுமார் 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட முதியவர்கள் கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவில்லை என்று மருந்து உற்பத்தி, வழங்கள் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
கொரோனா தொற்றுக்குள்ளாகி தினசரி உயிரிழப்போரில் பெரும்பாலானவர்கள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதவர்கள் . தற்போதைய கொவிட் தொற்று அனர்த்த நிலைமையை கருத்தில் கொண்டு 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசியை விரைவில் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
No comments