பூநகரி சங்குப்பிட்டி கடற்பரப்பில் காணப்பட்ட சடலம் கிளிநொச்சி பதில் நீதவான் முன்னிலையில் இன்றைய தினம் காலை மீட்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்டம், பூநகரி சங்குப்பிட்டி பாலத்திற்கருகில் நேற்றைய தினம் கைகள், கால்கள் நைலோன் கயிற்றினால் கட்டப்பட்டு வலையினால் சுற்றப்பட்ட நிலையில் சடலம் ஒன்று காணப்பட்டது.
குறித்த சடலம் அடையாளம் காண முடியாதளவுக்கு உருக்குலைந்த நிலையில் காணப்பட்டது.
அந்நிலையில் இன்றைய தினம் காலை 11.30 மணியளவில் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் பதில் நீதவான் சதீஸ்குமார் விஜயராணி முன்னிலையில் பூநகரி பொலீஸாரினால் சடலம் மீட்கப்பட்டுள்ளது.









No comments