வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவரது அலுவலக அதிகாரிகள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அமைச்சரும் அன்டிஜன் பரிசோதனை செய்துள்ளார்.
இதில் கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டு, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, தன்னுடன் அண்மைக் காலத்தில் நெருங்கி பழகியவர்களை சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்திக்கொள்ளுமாறு அமைச்சர் பந்துல குணவர்தன கேட்டுக்கொண்டுள்ளார்.







No comments