Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில்.வீடொன்றில் தீ விபத்து - பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசம்!


யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில், ஆரியம்குளம் சந்திக்கு அருகாமையில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெறுமதியான பொருள்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
 
இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றது.
 
வீட்டில் சுவாமி அறையில் விளக்கேற்றிவிட்டு அங்கு வசிக்கும் பெண் ஆலயம் சென்று திரும்பிய நிலையில் வீட்டிக்குள் தீ விபத்து இடம்பெற்றதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
 
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர தீயணைப்புப் படைக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கு விரைந்த அவர்கள் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
 
இருந்த போதிலும் வீட்டிலிருந்த பெறுமதியான பொருட்கள் பலவும் எரிந்து நாசமாகியுள்ளது.







No comments