மாத்தளையிலிருந்து செலகம வரை பயணித்த தனியார் பஸ்ஸொன்று மாத்தளை- கொலென்னேவத்த பகுதியில் விபத்துக்குள்ளானதில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் மாத்தளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களுள் 3 வயது குழந்தை ஒன்றும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மற்றுமொரு வாகனமொன்றுக்கு இடமளித்த போதே, இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மஹவெல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments