Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

திருமண நிகழ்வில் 50 பேர் கலந்து கொள்ள அனுமதி!


புதிய சுகாதார நடைமுறைகளுக்கு அமைய சில கட்டுப்பாடுகளுடன் திருமண நிகழ்வுகளை நாளை (வெள்ளிக்கிழமை) முதல் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, மண்டபங்களின் அளவில் 25 சதவீதம் பூர்த்தியடையக் கூடிய விதத்தில் அதிகபட்சமாக 50 பேர் கலந்துகொள்ளும் அளவில் திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு, வெளிப்புற திருமணங்கள் வரவேற்கப்படுவதாகவும் அவற்றில் மது பாவனைக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் மரண சடங்குகளில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கை நாளை முதல் 15 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில விளையாட்டு நிகழ்வுகளை சுகாதார நடைமுறைகளுக்கு உட்பட்டு நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது

No comments