Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

புலிகள் காலத்தில் போதைப்பொருள் கடத்தல்கள் இடம்பெறவில்லை!


தமிழீடு விடுதலை புலிகளின் காலத்தில் வடக்கு , கிழக்கு ஊடாக போதைப் பொருள் கடத்தல்கள் இடம்பெற்றிருக்கவில்லை. ஆனால் அது எவ்வாறு கட்டுப்படுத்தப்பட்டிருந்தது என்பது எமக்கு தொியவில்லை என கடற்படை பேச்சாளர் கப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயேஅவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், 

தமிழீழ விடுதலை புலிகள் காலத்தில் வடகிழக்கில் போதைப்பொருள் கடத்தல்கள் இடம்பெற்றிருக்கவில்லை. அது எவ்வாறு கட்டுப்படுத்தப்பட்டிருந்தது என்பது எமக்கு தொியவில்லை.

ஒருவேளை போர் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் வெளிநாட்டு படகுகள் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைய முடியாது. அதுவும் காரணமாக இருக்கலாம்.

தற்போது வடக்கு , கிழக்கு ஊடாக போதைப்பொருள் கடத்தல்கள் அதிகளவில் இடம்பெறும் நிலையில் அதிகளவான கடத்தல்களை கடற்படையினர் முறியடிக்கின்றனர். இது கடற்படையினரின் செயற்பாடுகள் துரிதமாகி வருவதையே காட்டுகின்றது என தெரிவித்தார். 

No comments