3 வயதான சிறுவனை பயன்படுத்தி போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட குழுவை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் மடக்கியுள்ளனர்.
வேல்தெனிய எனும் பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் , அப்பகுதியை சேர்ந்த சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கடத்தல் நடவடிக்கைக்குச் சிறுவனின் தாயும் உதவியளித்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களைக் கைது செய்து விசாரணைகளுக்கு உட்படுத்தியதன் பின்னர், சிறுவனின் உடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6 கிராம் போதைப்பொருள் கண்டறியப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
No comments