வீடொன்றினுள் சூட்சசமான முறையில் ஹேரோயின் வியாபாரத்தை மேற்கொண்டு வந்த இருவர் பொலிஸ் விசேட அதிரடிப் படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப் படையின் அளுத்கம முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைந்த நேற்று ஊரகஸ்மங்ஹந்திய, துடுவ பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்று சுற்றி வளைக்கப்பட்டது.
இதன் போது, 3 கிராம் 460 மில்லிகிராம் ஹெரோயின் போதைபொருளும் மறறும் 118,990 ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்கள் ஊரகஸ்மங்ஹந்திய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
No comments