Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ்.மிருசுவிலில் வயோதிப தம்பதிகள் மீது தாக்குதல்


மிருசுவில் பகுதியில் அயல்வீட்டார் அத்துமீறி வயோதிபர்களின் வீட்டுக்குள் புகுந்து மேற்கொண்ட தாக்குதலில் வயோதிப தம்பதிகள் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மிருசுவில் தவசிக்குளம் பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் , 69 வயதான கணவனும் , 52 வயதான அவரது மனைவியும் காயமடைந்துள்ளனர். 
 
அயல்வீட்டார் தம் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தம் மீது தாக்குதலை மேற்கொண்டதாக தாக்குதலுக்கு இலக்கான தம்பதிகள் தெரிவித்துள்ளனர். 
 
சம்பவம் தொடர்பில் கொடிகாம பொலிஸார்  விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments