Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

அனலைதீவில் வீடொன்றில் இருந்து மஞ்சள் மீட்பு - இருவர் கைது!


அனலைதீவில் வீடொன்றில் 20 மஞ்சள் மூடைகள் பதுக்கிவைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளன என்று கடற்படை தெரிவித்துள்ளது.

அதனை பதுக்கி வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் கைது நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு முன்னெடுக்கப்பட்டது என்று கடற்படை குறிப்பிட்டது.

நாவற்குழி மற்றும் அனலைதீவைச் ஆகிய இடங்களைச் இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலிருந்து கடத்திவரப்பட்ட மஞ்சள் மூடைகள் வீடொன்றில் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது என்று கடற்படை கூறியது

No comments