முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வெடிமருந்துகள் மற்றும் கசிப்பு என்பவற்றுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுக்குடியிருப்பு உடையார்கட்டு பகுதியை சேர்ந்த 42 வயதான நபரே முல்லைத்தீவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 200 கிராம் வெடி மருந்து மற்றும் 1500 மில்லி லீற்றர் கசிப்பு என்பவை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.








No comments