Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை வன்புணர்ந்த குற்றவாளிக்கு 17 வருட சிறை!


மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 51 வயதான குற்றவாளிக்கு 17 வருட கடூழிய சிறைத்தண்டணை வழங்கி கம்பஹா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அத்துடன் மூன்று இலட்ச ரூபா தண்டப்பணம் விதித்துள்ளதுடன் அதனைச் செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் இரு வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மல்வத்துபிட்டிய, கினிகமவில் 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் 02 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த காலப்பகுதியில், விவசாய நிலத்தில் உள்ள வீடொன்றில் தனிமையில் இருந்த 44 வயது பெண் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

இது குறித்து அவர் உறவினர் ஒருவருக்கு வழங்கிய தகவலுக்கமைய ஒரு பிள்ளையின் தந்தையான சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணைகளில், எதிரியை குற்றவாளியாக கண்ட நீதிமன்றம் ,  17 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தண்டனை தீர்ப்பளித்தது. 

No comments