தெற்கு தாய்வானில் 13 மாடி கோபுரத் தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 46பேர் உயிரிழந்துள்ளதோடு பலர் காயமடைந்துள்ளனர்.
இன்று (வியாழக்கிழமை) அதிகாலையில் காவோசியுங் நகரில் உள்ள ஒரு குடியிருப்பு மற்றும் வணிகக் கட்டடத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக உள்ளூர் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
79பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் இதில் 14பேர் ஆபத்தான நிலையில் இருந்ததாகவும் தீயணைப்பு துறை தெரிவித்தது.
நான்கு மணி நேர கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தீயணைப்பு வீரர்கள் கூறினர்.
இந்த தீ விபத்துக்கான காரணம் இன்னமும் தெளிவாக தெரியாத நிலையில், புலனாய்வாளர்கள் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






No comments