Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

முல்லைத்தீவில் இராணுவ வாகனத்துடன் விபத்துக்குள்ளான இளைஞன் உயிரிழப்பு!

 


முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு நகரில் நிறுத்தப்பட்டிருந்த இராணுவத்தினரின் வாகனத்துடன் மோதி இளைஞன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு , சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளான்.

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றிருக்கின்றது, புதுக்குடியிருப்பு - வேணாவில் பகுதியை சேர்ந்த மாரிமுத்து பவிசாந்த்(வயது21) என்ற இளைஞனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளான்.

நேற்றிரவு மின்சாரம் தடைப்பட்டிருந்ததுடன், மழையும் பெய்து கொண்டிருந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் நிறுத்தப்பட்டிருந்த இராணுவ வாகனத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளதாக கூறப்படுகின்றது, சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

No comments