யாழ்.வடமராட்சி கிழக்கு - மாமுனை பகுதியை சேர்ந்த இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் சகோதரி வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
3 பிள்ளைகளின் தந்தையான ஆ.ஞானக்குமார் (வயது38) என்பவரே உயிரிழந்துள்ளார்.
முகமாலை - இத்தாவில் பகுதியில் உள்ள தனது சகோதரியின் வீட்டிற்கு சென்றிருந்தவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதன் அடிப்படையில் விசாரணைகள் நடந்து வருகின்றது.
No comments