Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

பாலியல் தொழிலுக்காக கடத்தி வரப்பட்ட இந்தோனேசியா பெண்கள் மீட்பு!


கல்கிஸை பகுதியிலுள்ள விபச்சார விடுதியொன்று நேற்றைய தினம் சனிக்கிழமை சுற்றிவளைக்கப்பட்டு சோதனையிடப்பட்ட போது, சட்டவிரோத பாலியல் கடத்தல் கும்பலினால் பாதிக்கப்பட்ட ஐந்து இந்தோனேசியப் பெண்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர்.

பாலியல் கடத்தல் கும்பலால் பாதிக்கப்பட்ட ஐந்து பெண்களும், சர்வதேச நட்சத்திர ஹோட்டல்களில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என்பது பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. 

அந்த பெண்களை நாட்டுக்குள் அழைத்து வந்தவுடன், அவர்களின் கடவுச்சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, தெஹிவளை மற்றும் கல்கிஸையில் அமைந்துள்ள விபச்சார விடுதிகளில் பாலியல் தொழிலில் ஈடுபட தள்ளப்பட்டுள்ளனர்

குறித்த பெண்களை நேற்றைய தினம் பிற்பகல் கல்கிசை நீதவான் முன்னிலையில் முற்படுத்திய போது, அவர்களை பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

பாலியல் வன்கொடுமை தொடர்பாக விசாரணை நடத்துமாறும், பாதிக்கப்பட்டவர்களின் கடவுச்சீட்டை நீதிமன்றக் காவலில் எடுத்து அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

No comments