தீபாவளியை கொண்டாட வெடிகளை வாங்கி சென்ற தந்தையும் மகனும் வெடிகள் வெடித்ததில் உயிரிழந்துள்ளனர்.
விழுப்புரம் - புதுச்சேரி பகுதியை சேர்ந்த தந்தையும் மகனும் இன்றைய தினம் தீபாவளியை கொண்டாடுவதற்கு மோட்டார் சைக்கிளில் சென்று வெடிகளை வாங்கிக்கொண்டு வீடும் திரும்பும் வேளை , அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளில் எதிரே வந்த பிறிதொரு மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானது.
அதன் போது மகனின் கைகளில் இருந்த வெடிகள் எதிர்பாராத விதமாக வெடித்ததில் தந்தையும் மகனும் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments