வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற வான் கல்கமுவ பகுதியில் விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
வவுனியாவில் இருந்து கொழும்பில் தமது மகளின் பதிவுத்திருமணத்திற்கு செல்வதாக வானில் குடும்பத்தினர் பயணித்துள்ளனர்.
அவர்கள் பயணித்த வான் கல்கமுவ பகுதியில் பாரவூர்தி ஒன்றுடன் விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த ஆறுபேர் படுகாயமடைந்தனர். வான் முற்றாக சேதமடைந்துள்ளது.
படுகாயமடைந்தவர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments