Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

கொத்து ரொட்டி வாங்குவதில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிவு!


கொத்து ரொட்டி வாங்க சென்ற இடத்தில் ஏற்பட்ட தகராறில் , கொத்து வாங்க வந்த இளைஞன் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். 

காலி , பத்தேகம பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 
 
அப்பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் இரவு கொத்து ரொட்டி வாங்குவதற்காக கொலையான இளைஞன் சென்றுள்ளார். அங்கு உணவாக உரிமையாளருக்கும் , குறித்த இளைஞனுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. 
 
அதனை அடுத்து அங்கிருந்து வெளியேறிய இளைஞன் , தனது  வீட்டுக்கு சென்று கூரிய ஆயுதம் ஒன்றை எடுத்து வந்து , உணவாக உரிமையாளரை தாக்கியுள்ளார்.
 
அதனை கண்ணுற்ற உணவாக உரிமையாளரின் மகன் , தந்தை மீது தாக்குதல் மேற்கொண்ட இளைஞன் மீது பதில் தாக்குதலை மேற்கொண்டுள்ளார். அதில் இளைஞன் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். 
 
சம்பவத்தில் படுகாயமடைந்த உணவாக உரிமையாளர் கராப்பிட்டிய வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் , உணவாக உரிமையாளரின் மகனை கைது செய்து, மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments