திருமணத்திற்கு பின்னர் முக ஒப்பனையற்ற (மேக்கப்) மனைவியின் உண்மையான முகத்தை கண்டு தான் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருப்பதாக நீதிமன்றில் நபர் ஒருவர் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
துபாயை சேர்ந்த நபர் முகநூல் ஊடாக தன்னுடன் அறிமுகமான பெண்ணுடன் காதல் வயப்பட்டு அவரை பின்னர் திருமணம் செய்துள்ளார். குறித்த நபரே தற்போது விவாகரத்து கோரி நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளார்.
திருமணத்திற்கு பின்னர் தான் மனையின் உண்மையான முகத்தை தான் நேரில் பார்த்ததாகவும் , அப்போது முக ஒப்பனையற்று இருந்த மனைவியின் முகத்தை பார்த்து தான் அதிர்ச்சிக்கு உள்ளானதாகவும் . அதனால் தான் ஏமாற்றப்பட்டு விட்டதாகவும் கூறியே விவாகரத்து கோரியுள்ளார்.
No comments