Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - முன்னாள் ஜனாதிபதி , பிரதமருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்!


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 
 
களனி கங்கை மேல் நிர்மாணிக்கப்பட்டுள்ள "கல்யாணி தங்க நுழைவாயில்" பாலத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். 
 
மேலும் தெரிவிக்கையில், 
 
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களுக்கு முன்னாள் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை உள்ளிட்ட அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டுமென்று அந்தத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக கடந்த அரசாங்கம் நியமித்திருந்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளது.
 
அந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகள், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அதேவேளை, தொடர் நடவடிக்கைகளுக்காக நீதியரசர் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ஆகியவற்றிடமும் கையளிக்கப்பட்டுள்ளன
 
பாராளுமன்றச் சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழு வெளிப்படுத்தியுள்ள குற்றவாளிகளுக்கு எதிராகச் சட்டத்தை நிறைவேற்ற முடியும்.
 
அதற்கு அவசியான மூன்றில் இரண்டு (2/3) பெரும்பான்மை அதிகாரம் அரசாங்கத்துக்கு உள்ளது.
 
அதன் காரணமாக, கோரிக்கைகளை முன்வைக்கும் போது கவனமாக இருக்குமாறும், மக்களை ஏமாற்ற வேண்டாம் என்றும் எதிர்க்கட்சியினருக்கு தெரிவித்தேன் என தெரிவித்தார்.

No comments