யாழில் பிரபல வர்த்தகரும் மானிப்பாயில் அமைந்துள்ள பிரபல இலத்திரனியல் கடையான சுந்தர் சனின் ஸ்தாபகரான சிவகுமார் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா தொற்றுக்கு இலக்கான நிலையில் , யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக கோம்பயன்மணல் மயானத்தில் தகனம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.
No comments