வீதியை கடக்க முயன்ற முதியவர் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில், படுகாயமடைந்த முதியவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மட்டுவில் வடக்கு சந்திரபுரத்தை சேர்ந்த க.லோகநாதன் (வயது65) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு யாழ்ப்பாணம் கண்டி நெடுங்சாலையில், சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு சென்றுவிட்டு வீதியை கடக்க முயன்றபோது, மோட்டார் சைக்கிள் முதியவரை மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த முதியவர் மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதியான இளைஞன் ஆகிய இருவரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில் முதியவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
No comments