Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

மோட்டார் சைக்கிளை திருடிய மகனை கண்டித்து உரிமையாளரிடம் ஒப்படைத்த பெற்றோர்!


மோட்டார் சைக்கிள் ஒன்றினை திருடிக்கொண்டு வீடு சென்ற மகனை பெற்றோர் கண்டித்து , மோட்டார் சைக்கிளை உரிமையாளரிடம் கையளித்துள்ளனர். 

மட்டக்களப்பு ஓட்டமாவடி பகுதியில் நடைபெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 
 
ஓட்டமாவடியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று வியாழக்கிழமை காலை பொருட்களை கொள்வனவு செய்வதற்கு இளைஞன் ஒருவர் தனது பல்சர் மோட்டார் சைக்கிளில் வந்திருந்தார். 
 
மோட்டார் சைக்கிளை வர்த்தக நிலையத்திற்கு முன்பாக நிறுத்தி விட்டு , பொருட்களை கொள்வனவு செய்வதற்கு இளைஞன் சென்ற வேளை அங்கிருந்த மற்றுமொரு இளைஞன் மோட்டார் சைக்கிளை திருடி சென்றான். 
 
திருடிய மோட்டார் சைக்கிளில் தனது வீட்டுக்கு சென்ற போது , பெற்றோர் மகனிடம் மோட்டார் சைக்கிளில் தொடர்பில் விசாரித்த போது , மகன் மோட்டார் சைக்கிளை திருடி வந்ததை கண்டறிந்துள்ளனர். 
 
உடனையே மகனை கண்டித்த பெற்றோர் , மோட்டார் சைக்கிளையும் மகனையும் , கொண்டு சென்று மோட்டார் சைக்கிள் உரிமையாரிடம் மன்னிப்புக்கோரி மோட்டார் சைக்கிளை உரிமையாளரிடம் கையளித்தனர். 
 
பெற்றோரின் செயற்பாட்டை அறிந்த அங்கிருந்தவர்கள் பெற்றோரை பாராட்டியதுடன் , மோட்டார் சைக்கிள் திருடிய இளைஞனுக்கும் அறிவுரைகளை கூறினார்கள். 

No comments