Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

19 வயது மகளுடன் தகாத உறவு - பிறந்த குழந்தையை ஆற்றில் வீசிய தந்தை!


தனது 19 வயது மகளுடனான தகாத உறவின் மூலம் பிறந்த குழந்தையை ஆற்றில் வீசிய தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சொறிக் கல்முனை - சம்மாந்துறை பிரதான வீதியில் ஆற்றங்கரைக்கு அண்மையில் , பிறந்து மூன்று நாட்கள் மதிக்கத்தக்க சிசு ஒன்றின் சடலம் காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு விசாரணைகளை ஆரம்பித்தனர். 
 
விசாரணைகளின் அடிப்படையில் , சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சென்னல் கிராமம் 01 பகுதியை சேர்ந்த 41 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
குறித்த நபர் ஏற்கனவே இரண்டு திருமணங்களை முடித்த நிலையில் , இரண்டு மனைவிமாரையும் பிரிந்து முதல் திருமணத்தின் மூலம் பிறந்த 19 வயதுடைய மகள் , மற்றும் இரண்டாவது திருமணத்த்தின் மூலம் பிறந்த 2 பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். 
 
அந்நிலையிலையே தனது 19 வயது மகளுடன் தகாத உறவை வைத்திருந்ததன் காரணமாக அவர்களுக்கு பிறந்த குழந்தையை ஆற்றங்கரையில் வீசினார் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

No comments