Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில் நீரிழிவு நோயாளர்கள் அதிகரிப்பு - இளம் வயதினரே நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகின்றார்கள்!


யாழ்.மாவட்டத்தில் நீரிழிவு நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை நிலையத்தின் பொறுப்பதிகாரி ம.அரவிந்தன் தெரிவித்துள்ளார். 

யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நீரிழிவு சிகிச்சை முகாமை ஆரம்பித்து வைத்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

யாழ்.மாவட்டத்தைப் பொறுத்தவரை தற்போது நீரிழிவு நோய் என்பது பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. குறிப்பாக இளவயதினருக்கு இந்த நீரிழிவு நோயானது அதிகமாக காணப்படுகின்றது.

இந்த நோய்த் தாக்கத்தினால் எதிர்காலத்தில் பல பாதிப்புகள் ஏற்படக் கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளது. குறிப்பாக இந்த நீரிழிவு நோய் தொற்றுக்கு உள்ளாகுவோருக்கு ஏனைய பல தொற்றுநோய்களும் ஏற்படும்.

குறிப்பாக பாரிசவாதம் மற்றும் ஏனைய பல தொற்று நோய்கள் ஏற்படகூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன. எனவே இளவயதினர் குறித்த நீரிழிவு நோய் தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும்.

குறிப்பாக உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அல்லது தகுந்த வேளைகளில் நீரிழிவு பரிசோதனையை மேற்கொண்டு ஆரம்பத்தில் இந்த நீரிழிவு நோயினை இனங்காணும் பட்சத்தில் அந்த நோயை குணமாக்க முடியும்.


அல்லது நோய் தொற்று காணப்பட்டால் அதனை முறையாக பின்பற்றி குணப்படுத்த முடியும் எனவே யாழ்.மாவட்டத்தில் நீரிழிவுநோய் தொடர்பில் பொதுமக்கள் சற்று அவதானமாக செயற்பட வேண்டும் என தெரிவித்தார்.

No comments