குடும்ப தகராறு காரணமாக தனது மனைவியை கணவன் கட்டை ஒன்றினால் அடித்து படுகொலை செய்துள்ளார்.
மாத்தறை பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற குறித்த சம்பவத்தில் , மாலிம்பட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மீகஹகொடகே தோட்டம் பகுதியை சேர்ந்த 33 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.
அதேவேளை வேளை கணவனின் தாக்குதலில் இருந்து உயிரிழந்த பெண்ணை காப்பாற்ற முனைந்த மற்றுமொரு பெண் காயமடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் கணவனை கைது செய்துள்ளனர்.
No comments