Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

மகளின் காதலன் வீட்டுக்கு சென்று துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவர் அடித்துக்கொலை!


மகளின் காதலனான இராணுவ சிப்பாய் மீது துப்பாக்கி பிரயோகம் செய்தவர் குறித்த இராணுவ சிப்பாயின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். 

அதேவேளை குறித்த சம்பவத்தில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி இராணுவ சிப்பாயின் தாய் படுகாயமடைந்துள்ளதுடன் , துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவருடன் சென்று இருந்த நபர் , இராணுவ சிப்பாயின் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார். 

காலி - ஊருகஸ்மங்சந்தி பகுதியை சேர்ந்த உயிரிழந்தவரின் மகள் , அப்பகுதியை சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவரை காதலித்துள்ளார். 

மகளின் காதல் விடயத்தை அறிந்த அவர் , தனது நண்பர் ஒருவருடன் , மகளின் காதலனான இராணுவ சிப்பாயின் வீட்டுக்கு துப்பாக்கியுடன் சென்று துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளார். 

அதன் போது , துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி சிப்பாயின் தாய் படுகாயமடைந்துள்ளார். அதனை அடுத்து சிப்பாய் கூரிய ஆயுதத்தால் , துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நபர் மீதும், அவர் கூட வந்த அவரின் நண்பர் மீதும் கடுமையாக தாக்குதலை மேற்கொண்டுள்ளார். 

சிப்பாயின் தாக்குதலுக்கு இலக்கான , துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட , சிப்பாயின் காதலியின் தந்தை சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். அவரின் நண்பர் படுகாயம் அடைந்துள்ளார். 

படுகாயமடைந்த இருவரும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார் , இராணுவ சிப்பாயை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 


No comments