மகளின் காதலனான இராணுவ சிப்பாய் மீது துப்பாக்கி பிரயோகம் செய்தவர் குறித்த இராணுவ சிப்பாயின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
அதேவேளை குறித்த சம்பவத்தில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி இராணுவ சிப்பாயின் தாய் படுகாயமடைந்துள்ளதுடன் , துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவருடன் சென்று இருந்த நபர் , இராணுவ சிப்பாயின் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார்.
காலி - ஊருகஸ்மங்சந்தி பகுதியை சேர்ந்த உயிரிழந்தவரின் மகள் , அப்பகுதியை சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவரை காதலித்துள்ளார்.
மகளின் காதல் விடயத்தை அறிந்த அவர் , தனது நண்பர் ஒருவருடன் , மகளின் காதலனான இராணுவ சிப்பாயின் வீட்டுக்கு துப்பாக்கியுடன் சென்று துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளார்.
அதன் போது , துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி சிப்பாயின் தாய் படுகாயமடைந்துள்ளார். அதனை அடுத்து சிப்பாய் கூரிய ஆயுதத்தால் , துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நபர் மீதும், அவர் கூட வந்த அவரின் நண்பர் மீதும் கடுமையாக தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
சிப்பாயின் தாக்குதலுக்கு இலக்கான , துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட , சிப்பாயின் காதலியின் தந்தை சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். அவரின் நண்பர் படுகாயம் அடைந்துள்ளார்.
படுகாயமடைந்த இருவரும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார் , இராணுவ சிப்பாயை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments