Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

மாவீரர் நாளுக்கு தீருவில் திடலை வழங்க முடியாது - வல்வெட்டித்துறை நகர சபை கைவிரிப்பு!


வல்வெட்டித்துறை தீருவில் திடலை மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு வழங்க வேண்டாம் என வல்வெட்டித்துறை பொலிஸார் , கோரியதால் , திடலில் நிகழ்வு நடத்துவதற்கு அனுமதி வழங்க முடியாது என வல்வெட்டித்துறை நகர சபை தலைவர் ச. செல்வேந்திரா தெரிவித்துள்ளார். 

வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் , மாவீரர் நாளான எதிர்வரும் 27ஆம் திகதி தீருவில் மைதானத்தில் நிகழ்வுகளை முன்னெடுக்க நகர சபையிடம் அனுமதி கோரி இருந்தார். 
 
அதற்கு பதில் அளிக்கும் முகமாக நகர சபை தலைவரால் , " இம்மாத இறுதி வரை தீருவில் மைதானத்தில் எந்த நிகழ்வுகளையும் நடாத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என வல்வெட்டித்துறை பொலிஸாரினால் தனக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமையால் , தங்கள் கோரிக்கை தொடர்பில் சாதகமாக பரிசீலிக்க முடியாது என்பதனை தெரிவித்து கொள்வதாக " எழுத்து மூலம் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு அறிவித்துள்ளார். 

No comments