Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

விளக்கீட்டை முன்னிட்டு யாழில் சிட்டி விற்பனை அமோகம்!


கார்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிட்டி வியாபாரம் மும்முரமாக இடம்பெற்று வருகிறது.
 
கார்த்திகைத் தீபத் திருநாள் நாளை கொண்டாடப்படவுள்ளது.
 
இதனை முன்னிட்டு யாழ்.குடாநாட்டின் முக்கிய சந்தையான திருநெல்வேலி பொதுச் சந்தையை அண்டியுள்ள பகுதிகளில் வியாபாரிகள் சிட்டி வியாபாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருவதைக் காண முடிகின்றது.
 
தமது வீடுகளிலும், ஆலயங்களிலும் தீபமேற்றி வழிபடுவதற்காக மக்கள் பலரும் ஆர்வத்துடன் சிட்டிகளைக் கொள்வனவு செய்து செல்கின்றனர்.
 
சிட்டிகள் பல்வேறு வடிவங்களிலும், பல வர்ண நிறங்களிலும்  விற்பனையாகின்றமை குறிப்பிடத்தக்கது.







No comments